Thursday, October 16, 2025
No menu items!
HomeMannar NewsMannar DS Newsமன்னாரில் இடம் பெற்ற   வேலைவாய்ப்பு முகாம் மற்றும் பசுமை தொழில்நுட்ப கண்காட்சி!

மன்னாரில் இடம் பெற்ற   வேலைவாய்ப்பு முகாம் மற்றும் பசுமை தொழில்நுட்ப கண்காட்சி!

மன்னார் மாவட்ட செயலகத்தின் ஏற்பாட்டில் மனித வலு வேலைவாய்ப்பு திணைக்களம் மற்றும் ADRA நிறுவனம் இணைந்து இன்றைய தினம் புதன்கிழமை (11) காலை மன்னார் மாவட்ட செயலக வளாகத்தில் காலை மாவட்ட தொழிற் சந்தை நிகழ்வு நடாத்தப்பட்டது.

இதன் போது மன்னார் மாவட்டம் முழுவதும் இயங்கி வரும் தொழில் வழங்கும் நிறுவனங்களும் அதே நேரம் உயர்கல்வி வழங்கும் நிறுவனங்களும், உள்ளூர் உற்பத்தியாளர்களும் கலந்து கொண்டிருந்தனர். 

குறித்த நிகழ்வில் பிரதம விருந்தினராக மன்னார் மாவட்ட அரசாங்க அதிபர் உட்பட பிரதேச செயலாளர்கள்,திணைக்கள தலைவர்கள், தொழில் வழங்கும் நிறுவனங்களின் பிரதிநிதிகள், மற்றும் வேலை வாய்ப்புக்காக காத்திருந்த பல நூற்றுக்கணக்கான இளைஞர், யுவதிகள் ஆகியோர் கலந்து கொண்டிருந்தனர். 

மாவட்ட தொழில் சந்தைக்கு வருகை தந்த தொழில் வழங்கும் நிறுவனத்தின் பிரதிநிதிகள் தமது நிறுவனங்கள் ஊடாக எவ்வாறு தொழிலை பெற்றுக்கொள்ள முடியும்?அதற்கு மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள் குறித்து விளக்கமளித்தனர்.

அதே நேரம் உள்ளூர் உற்பத்தி முயற்சியாளர்களும் கலந்து கொண்டு தங்கள் உற்பத்திப் பொருட்களை காட்சிப்படுத்தியதுடன் விற்பனை நடவடிக்கைகளிலும் ஈடுபட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments