Thursday, October 16, 2025
No menu items!
HomeMannar NewsMannar DS Newsமன்னாரில்  ஆரம்பமானது வடமாகாண பூப்பந்தாட்ட பிரீமியர் லீக்!

மன்னாரில்  ஆரம்பமானது வடமாகாண பூப்பந்தாட்ட பிரீமியர் லீக்!

வடமாகாண பூப்பந்தாட்ட சங்கம் ஏற்பாடு செய்த வட மாகாண பூப்பந்தாட்ட பிரீமியர் லீக் சுற்றுப் போட்டி இன்றைய தினம் சனிக்கிழமை(12) காலை 8.30 மணியளவில் மன்னார் மாவட்ட பொது விளையாட்டு மைதான உள்ளக அரங்கில் ஆரம்பமானது.

குறித்த போட்டியில் கலந்து கொள்ள வடக்கு மாகாணத்தில் இருந்து 06 அணிகளும்,அதன் உரிமையாளர்களும் கலந்து கொண்டிருந்தனர்.

வடமாகாண பூப்பந்தாட்ட சங்கத்தின் செயலாளரும்,வடமாகாண பூப்பந்தாட்ட லீக் தலைவருமான எம்.பிரின்ஸ் லெம்பேட் தலைமையில் குறித்த போட்டி ஆரம்பமானது.

ஆரம்ப நிகழ்வான இன்றைய தினம் சனிக்கிழமை (12)   விருந்தினர்களாக மன்னார் பிரதேசச் செயலாளர் எம்.பிரதீப்,மன்னார் நகர முதல்வர் டானியல் வசந்தன்,உதவி மாவட்டச் செயலாளர் வி.டில்சான் பயஸ் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

இதன் போது விருந்தினர்கள் வரவேற்கப் பட்டதோடு,நிகழ்வுகள் ஆரம்பமானது.இதன் போது விருந்தினர்களாக கலந்து கொண்ட மன்னார் பிரதேசச் செயலாளர் எம்.பிரதீப் ,மன்னார் நகர முதல்வர் டானியல் வசந்தன் ஆகியோர் இணைந்து வடமாகாண பூப்பந்தாட்ட பிரீமியர் லீக் கிண்ணத்தை அறிமுகம் செய்து வைத்தனர்.

அதனை தொடர்ந்து அணிகளின் அறிமுகம் இடம் பெற்ற நிலையில் முதல் சுற்று ஆரம்பமானது.நாளைய தினம் ஞாயிற்றுக்கிழமை (13) மாலை 4.30 மணிக்கு இறுதிச் சுற்று மற்றும் பரிசளிப்பு நிகழ்வும் இடம் பெற உள்ளன.

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments