சாரதி அனுமதிப்பத்திரத்தின் செல்லுபடியாகும் காலத்தை நீடிக்கவுள்ளதாக மோட்டார் போக்குவத்துத் திணைக்களத்தின் ஆணையாளர் நாயகம் நிஷாந்த அனுருத்த வீரசிங்க தெரிவித்துள்ளார்.
செல்லுபடியாகும் காலத்தை நீட்டிப்பது தொடர்பான வர்த்தமானி அறிவிப்பொன்றும் விரைவில் வெளியிடப்படும் எனவும் அவர் தெரிவித்தார்.
மேலும் நிலுவையிலுள்ள 900,000 சாரதி அனுமதிப்பத்திரங்களையும் இன்னும் ஆறு மாதங்களுக்குள் அச்சிட்டு வழங்கவுள்ளதாகவும் அவர் கூறினார்.