Thursday, October 16, 2025
No menu items!
HomeMannar NewsMannar DS Newsமன்னாரில் உள்ள மாவீரர் துயிலும் இல்லங்களில் மாவீரர் தின நினைவேந்தல் முன்னெடுப்பு!

மன்னாரில் உள்ள மாவீரர் துயிலும் இல்லங்களில் மாவீரர் தின நினைவேந்தல் முன்னெடுப்பு!

மாவீரர் தினத்தையொட்டி மன்னாரில் ஆட்காட்டிவெளி மற்றும் பண்டிவிருச்சானில் உள்ள மாவீரர் துயிலும் இல்லங்களில் சிவப்பு, மஞ்சள் கொடிகள் பறக்க விட்டு உணர்வு பூர்வமாக நினைவு தினம் இன்றையதினம் திங்கட்கிழமை (27) மாலை நினைவு கூறப்பட்டுள்ளது.

-தமிழர் தாயகத்திற்காக உயிர் நீத்த உறவுகளை நினைவு கூறும் வகையில் கார்த்திகை மாதம் 27 ஆம் திகதி மாவீரர் தினம் வருடா வருடம் நினைவு கூறப்பட்டு வருகிறது.

அதற்கு அமைவாக மன்னார் மாவட்ட மாந்தை மேற்கு பிரதேச செயலாளர் பிரிவில் உள்ள ஆட்காட்டி வெளி மாவீரர் துயிலும் இல்லத்தில் மாவீரர் நினைவேந்தல் நிகழ்வுகள்.இன்று திங்கட்கிழமை (27) மாலை உணர்வுபூர்வமாக அனுஷ்டிக்கப்பட்டது தமிழ் தேசிய விடுதலைக்காக தனது மகனை கரும்புலியாக வழங்கிய தந்தை நினைவு சுடரை ஏற்றி எழுச்சி பூர்வமாக நினைவேந்தலை ஆரம்பித்து வைத்தார் .

ஆட்காட்டி வெளி மாவீரர் துயிலும் இல்லத்தில் மாவீரர்களின் உறவினர்கள் பெருந்திரளான மக்கள்,அருட்தந்தையர்கள்,அருட்சகோதரிகள்,சட்டத்தரணிகள் என ஆயிரக்கணக்கானவர்கள் ஒன்று திரண்டு உணர்வுபூர்வமாக மாவீரர்களுக்கு அஞ்சலி செலுத்தினர்.

அதே நேரம் மாவீரர் தூயிலும் இல்லங்களில் பொலிஸார் விசேட பதுகாப்பு நடவடிக்கைகளில் ஈடுபட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments