Wednesday, October 15, 2025
No menu items!
HomeSri Lanka Newsஅடுத்த ஆண்டு சவால்கள் நிறைந்தது: அமைச்சர் விடுத்துள்ள எச்சரிக்கை!

அடுத்த ஆண்டு சவால்கள் நிறைந்தது: அமைச்சர் விடுத்துள்ள எச்சரிக்கை!

எதிர்வரும் ஓராண்டு காலப்பகுதியில் இலங்கையில் ஏற்படவுள்ள கடுமையான வறட்சி நிலைமை தொடர்பில் விவசாய அமைச்சர் மஹிந்த அமரவீர எச்சரிக்கை விடுத்துள்ளார்.

இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில், எதிர்வரும் ஓராண்டு காலத்தில் நாட்டில் கடுமையான வறட்சி ஏற்படக்கூடும் என சர்வதேச வானிலை முன்னறிவிப்புகள் தெரிவித்துள்ளன.

தண்ணீர் பற்றாக்குறை ஏற்பட்டு பயிர்களை விளைவிக்க முடியாத நிலை ஏற்படும் என எதிர்வுகூறப்பட்டுள்ளது.

இந்த நாட்களில் நாட்டின் அனைத்து பகுதிகளிலும் மழை பெய்து வந்தாலும் கடந்த காலத்தை விட விவசாயிகள் கடும் வறட்சி நிலையை எதிர்நோக்க நேரிடும் என்பதால் நீர்த்தேக்கங்களில் தேங்கியுள்ள நீரை விவசாயிகள் மிகவும் சிக்கனமாக பயன்படுத்த வேண்டும் என்றும் அமைச்சர் அறிவுறுத்தியுள்ளார்.

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments