Thursday, October 16, 2025
No menu items!
HomeMannar NewsMannar DS Newsமன்னாரில் இலங்கை வங்கி ஊழியர்கள் தொழிற்சங்க நடவடிக்கை!

மன்னாரில் இலங்கை வங்கி ஊழியர்கள் தொழிற்சங்க நடவடிக்கை!

மன்னார் இலங்கை வங்கி ஊழியர்கள் இன்றையதினம் வியாழக்கிழமை காலை 10.30 முதல் அடையாள தொழிற்சங்க நடவடிக்கை ஒன்றை முன்னெடுத்து வருகின்றனர்.

அரச வங்கிகளின் ஒன்றிணைந்த தொழிற்சங்க கூட்டமைப்பின் ஏற்பாட்டில் இன்று காலை 10.30 தொடக்கம் வங்கி கிளைகளை மூடி கொடுக்கல் வாங்கள் செயற்பாடுகளில் இருந்து விலகியுள்ளனர்.

குறித்த தொழிற்சங்க நடவடிக்கை காரணமாக பல்வேறு சேவைகளின் நிமித்த வங்கிக்கு வருகை தந்த பொது மக்கள் பல்வேறு அசெளகரியங்களை எதிர் கொண்டதுடன் வங்கி செயற்பாடுகளை பூர்தி செய்ய முடியாத நிலையில் பல தூர இடங்களில் இருந்து வருகை தந்தவர்கள் ஏமாற்றத்துடன் திரும்பியதையும் அவதானிக்க கூடியதாக இருந்தது.

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments