Thursday, October 16, 2025
No menu items!
HomeMannar NewsMannar DS Newsஇறந்த சிறுமிக்கு நீதி கோரி நீதிமன்றத்திற்கு முன் போராட்டம்!

இறந்த சிறுமிக்கு நீதி கோரி நீதிமன்றத்திற்கு முன் போராட்டம்!

மன்னார் தலைமன்னார் கிராமம் பகுதியில் பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்தப்பட்டு கொலை செய்யப்பட்ட சிறுமியின் மரணத்திற்கு நீதி கோரி இன்றைய தினம் திங்கட்கிழமை காலை மன்னார் நீதவான் நீதிமன்ற வளாகத்திற்கு முன் அமைதிவழி போராட்டம் ஒன்று இடம் பெற்றது.

சிறுமியின் மரணத்திற்கு நீதியானதும் விரைவானதுமான நியாயத்தை வழங்க கோரியும் விசேட நீதிபதிகள் அடங்கிய குழு ஒன்று குறித்த வழக்கை விசாரிக்க கோரியும் தலைமன்னார் கிராமத்தை சேர்ந்த பொது மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டிருந்தனர்.

பாதிக்கப்பட்ட சிறுமிக்கு நீதிவழங்கு,விசேட விசாரணை பொலிஸ் குழுவை நியமி, சிறுவர்களை உயிர் போல் காப்போம், இணையவழி பாலியல் துஸ்பிரயோகங்களை நிறுத்துங்கள், எமது சிறுவர்களுக்கு பாதுகாப்பு வேண்டும், போன்ற பல்வேறு வாசகங்கள் எழுதப்பட்ட பதாதைகளையும் அதே நேரம் சிறுமியின் புகைப்படத்தையும் ஏந்தியவாறு அமைதி வழி போராட்டத்தில் ஈடுபட்டனர்.

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments