Saturday, May 18, 2024
No menu items!
HomeMannar NewsMannar DS News“எர் நிலம்” தொண்டமைப்பின் ஊடாக கற்றல் உபகரணங்கள் வழங்கல் நிகழ்வு!

“எர் நிலம்” தொண்டமைப்பின் ஊடாக கற்றல் உபகரணங்கள் வழங்கல் நிகழ்வு!

வடக்கில் மனிதாபிமான உதவிகளை செய்துவரும் “ஏர் நிலம்”அமைப்பின் ஊடாக “கல்வியே எங்கள் மூலதனம்” எனும் தொனிப்பொருளுடன் கற்றல் உபகரணங்களும்,மதிய உணவு வழங்கும் நிகழ்வும் முல்லைத்தீவு மாவட்ட தென்னியங்குளம் அரசினர் தமிழ் கலவன் பாடசாலையில் சிறப்பாக இடம்பெற்றது.

யாழ்பாணம் புங்குடுதீவைப் பிறப்பிடமாகவும்,பிரான்ஸ் நாட்டை வசிப்பிடமாகவும் கொண்ட அமரர் கனகாம்பிகை கனகசுந்தரம் அவர்கள் இறைபாதமடைந்து 02ஆம் ஆண்டு நினைவு நாளை முன்னிட்டு அன்னாரின் குடும்பத்தினரின் நிதி பங்களிப்பில் தென்னியங்குளம் பாடசாலையில் தேவை அதிகமுடைய 113 மாணவர்களுக்கான கற்றல் உபகரணங்கள் மேற்படி வழங்கி வைக்கப்பட்டது.

குறித்த பாடசாலையானது பெளதீக வளங்கள் குறைந்த அதிகளவு வறுமைகோட்டுக்கு உட்பட்ட மாணவர்களை கொண்டு சிறப்பாக இயங்கும் பாடசாலை என்ற அடிப்படையில் ஏர் நிலம் அமைப்பின் ஊடாக குறித்த பாடசாலை தெரிவு செய்யப்பட்டு அவர்களுக்கான கற்றல் உபகரணங்கள் வழங்கி வைக்கப்பட்டது.

மேற்படி நிகழ்வில் மதகுருமார்கள்,தென்னியன்குளம் கிராமசேவகர்,தென்னியங்குளம் பாடசாலை அதிபர், ஆசிரயர்கள்,மாணவர்கள், பெற்றொர்கள்,மற்றும் ஏர் நிலத்தின் செயலாற்றுனர் படைபாளி தே.பிரியன் எர் நிலத்தின் செயலாற்றுனர் கவிஞர் முறிகண்டி லக்சிதரன் ஆகியோர் கலந்து கொண்டனர்.

ஏர் நிலம் அமைப்பின் ஊடாக தொடர்சியாக பாடசாலை மாணவர்களுக்கான கற்றல் உபகரணங்கள் மற்றும் மதிய உணவு வழங்கும் செயற்திட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments