மன்னார் மாவட்ட கிரிக்கட் வீரர்களை ஊக்குவிக்கும் முகமாக தாய் தொலைக்காட்சி மற்றும் நியூஸ் 7 மன்னாரின் ஊடக அணுசரணையில் மாவட்ட துடுப்பாட்ட சங்கத்தினால் பிரமாண்டமாக நடாத்தப்படவுள்ள மன்னார் சுப்பர் லீக் சுற்றுத்தொடருக்கான வீரர்களை கொள்வனவு செய்யும் ஏல நிகழ்வு நேற்று வெள்ளிக்கிழமை மாலை 4 மணியளவில் மன்னார் ஆஹாஷ் தனியார் விருந்தினர் விடுதியில் இடம் பெற்றது.
குறித்த நிகழ்வுற்கு பிரதம விருந்தினராக மன்னார் உதவி மாவட்ட செயலாளர் திரு.டிலுசன் பயஸ் அவர்களும், சிறப்பு விருந்தினர்களாக வடமாகாண துடுப்பாட்ட சங்கத்தின் தலைவர், செயலாளர்,பொருளாளர் ஆகியோரும் கெளரவ விருந்தினர்களாக சட்டத்தரணி டினேஸன், தீபன் என்ரபிறைஸஸ் நிறுவனத்தின் உரிமையாளர் திரு.தீபன் மற்றும் மன்னார் யூனிய அஸுரன்ஸ் நிறுவனத்தின் முகாமையாளர் அவர்களும் கலந்து கொண்டனர்.
குறித்த நிகழ்வில் மன்னார் சுப்பர் லீக் சுற்று போட்டியில் மன்னார் மாவட்டத்தை பிரதிநிதுத்துவப்படுத்தி கலந்து கொள்ளும் 6 அணிகளுக்குமான சீருடைகளும் அறிமுகம் செய்யப்பட்டதுடன் வெற்றி கிண்ணமும் அறிமுகப்படுத்தப்பட்டது.
குறித்த சுற்று போட்டியில் கலந்து கொள்ள 111 துடுப்பாட்ட வீரர்கள் விண்ணபித்திருந்த நிலையில் அவர்களில் 72 வீரர்கள் போட்டிக்காக உள்வாங்கப்பட்டு ஏலத்தின் மூலம் கொள்வனவு செய்யப்பட்டனர்.
இவ் சுற்று தொடரின் லீக் சுற்றில் 15 போட்டிகள் இடம் பெறவுள்ளதுடன், இரண்டாவது சுற்று பிலே ஓப் Play-Off சுற்றாக இடம் பெற்று இறுதி போட்டி இடம் பெறவுள்ளது. மன்னார் பைட்டர்ஸ், மன்னார் ரோயல்ஸ், மன்னார் சுப்பர் விங்க்ஸ், மன்னார் புல்லட்ஸ், மன்னார் ரைடர்ஸ் மன்னார் பிலாஸ்டஸ் ஆகிய ஆறு அணிகள் கலந்து கொள்ளும்.
குறித்த சுற்று தொடரில் முதல் இடம் பெறும் அணிக்கு 250,000/- ரூபா பண பரிசும் இரண்டாம் இடம் பெறும் அணிக்கு 150,000 ரூபாவும் வழங்கப்படவுள்ளது. அதே நேரம் ஒவ்வொரு போட்டியிலும் ஆட்டநாயகன் தெரிவு செய்யப்ப்டவுள்ளதுடன், முழு சுற்று தொடருக்குமான சிறந்த பந்து வீச்சாளர், சிறந்த துடுப்பாட்டகாரர் தெரிவு செய்யப்பட்டு அவர்களுக்கு பரிசீல்கள் வழங்கப்படவுள்ளமை குறிப்பிடத்தகது.