மன்னார் மாவட்ட துடுப்பாட்ட சங்கத்தினால் பிரமாண்டமாக நடாத்தப்படவுள்ள மன்னார் சுப்பர் லீக் சுற்றுத்தொடரின் நான்காவது பருவகாலம் வருகின்ற பெப்ரவரி மாதம் இடம் பெறவுள்ள நிலையில் போட்டிக்கான வீரர்களை கொள்வனவு செய்யும் ஏல நிகழ்வு இன்று வெள்ளிக்கிழமை மன்னார் ஆஹாஷ் தனியார் விருந்தினர் விடுதியில் மாலை 4 மணிக்கு இடம் பெறவுள்ளது.
மன்னார் மாவட்டத்தை பிரதிநிதுத்துவப்படுத்தி 6 அணிகள் கலந்து கொள்ளும் குறித்த சுற்றுத்தொடரில், அணிகளுக்கான வீரர்களை பொது ஏல முறையில் விற்பனை செய்து அணிகள் தயார்படுத்தப்பட்டு போட்டிகள் இடம் பெறவுள்ளது.
இன்றைய தினம் இடம் பெறவுள்ள குறித்த ஏலத்திற்கு 111 துடுப்பாட்ட வீரர்கள் விண்ணபித்துள்ள நிலையில் 72 வீரர்கள் போட்டிக்காக உள்வாங்கப்படவுள்ளனர் இவ் சுற்று தொடரின் லீக் சுற்றில் 15 போட்டிகள் இடம் பெறவுள்ளதுடன், இரண்டாவது சுற்று பிலே ஓப் Play-Off சுற்றாக இடம் பெற்ற இறுதி போட்டி இடம் பெறவுள்ளது.
மன்னார் பைட்டர்ஸ், மன்னார் ரோயல்ஸ், மன்னார் சுப்பர் விங்க்ஸ், மன்னார் புல்லட்ஸ், மன்னார் ரைடர்ஸ் மன்னார் பிலாஸ்டஸ் ஆகிய ஆறு அணிகள் கலந்து கொள்ளும் குறித்த சுற்று தொடரில் முதல் இடம் பெறும் அணிக்கு 250,000/- ரூபா பண பரிசும் இரண்டாம் இடம் பெறும் அணிக்கு 150,000 ரூபாவும் வழங்கப்படவுள்ளது.
அதே நேரம் ஒவ்வொரு போட்டியிலும் ஆட்டநாயகன் தெரிவு செய்யப்ப்டவுள்ளதுடன், முழு சுற்று தொடருக்குமான சிறந்த பந்து வீச்சாளர், சிறந்த துடுப்பாட்டகாரர் தெரிவு செய்யப்பட்டு அவர்களுக்கு பரிசீல்கள் வழங்கப்படவுள்ளமை குறிப்பிடத்தகது.