Wednesday, October 15, 2025
No menu items!
HomeMannar NewsMadu DS Newsதென் மன்னார் கடலில் ஒதுங்கிய கடல் ஆமைகள்!

தென் மன்னார் கடலில் ஒதுங்கிய கடல் ஆமைகள்!

மன்னார் தென் கடல் பகுதியில் கடல் ஆமைகள் இறந்து கரை ஒதுங்கி வருவதாக அப்பிரதேச மக்கள் தெரிவித்ததை தொடர்ந்து வன ஜீவராசிகள் திணைக்கள அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு வருகை தந்து உயிரிழந்த ஆமைகளை மீட்டுள்ளனர்.

கடந்த மூன்று தினங்களாக மன்னார் தென்கடல் பிராந்தியத்தில் அதிகமான கடல் ஆமைகள் இறந்து கடலில் மிதந்து வருவதாகவும் அத்துடன் அதிகமான ஆமைகள் இறந்த நிலையில் மன்னார் சிலாவத்துறை பகுதி கடற்கரைப் பகுதிகளில் கரையொதுங்கி வருவதாகவும் தெரிய வந்துள்ளது.

இது தொடர்பாக வனஜீவராசிகள் திணைக்கள அதிகாரிகளுக்கு தெரிவிக்கப்பட்டதை தொடர்ந்து அதிகாரிகள் இன்று (16) அப்பகுதிக்கு விஜயத்தை மேற்கொண்டு அதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

தொடர்ந்து கடந்த மூன்று தினங்களாக ஆமைகள் கரையில் ஒதுங்கி வருவதுடன் மேலும் ஆமைகள் கடலில் மிதந்து வருவதாகவும் மீனவர்கள் தெரிவிக்கின்றனர்.

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments