Wednesday, October 15, 2025
No menu items!
HomeMannar NewsMannar DS Newsகாற்றாலைக்கு எதிரான போராட்டம்; பொலிஸ் போராட்டகார்கள் இடையில் முரண்பாடு!

காற்றாலைக்கு எதிரான போராட்டம்; பொலிஸ் போராட்டகார்கள் இடையில் முரண்பாடு!

மன்னார் மாவட்டத்தில் காற்றாலை செயற்திட்டத்துக்கு எதிராக முன்னெடுக்கப்பட்டு வருகின்ற போராட்டமானது 24 நாளாவது நாளாக இன்றையதினம் இடம் பெற்று வருகின்ற நிலையில் மன்னார் மாவட்ட செயலக வளாகத்தில் பொலிஸார் மற்றும் போராட்டகாரளுக்கு இடையில் முரண்பாடு ஏற்பட்டுள்ளது.

இன்றையதினம் மன்னார் மாவட்ட அபிவிருத்திகுழு கூட்டம் மன்னார் மாவட்ட செயலகத்தில் இடம் பெற்று வந்த நிலையில் போராட்டகாரர்கள் மற்றும் பொதுமக்கள் இணைந்து அபிவிருத்தி குழு தலைவர் மற்றும் அரசாங்க அதிபர் உள்ளடங்களாக பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு மகஜர் ஒன்றை வழங்குவதற்க்கு மாவட்ட செயலகத்திற்குள் அமைதியான முறையில் நுழைந்த நிலையில் பொலிஸார் போராட்டகாரர்களை வெளியேற்ற முயற்சித்தனர்.

இந்த நிலையில் போராட்டகாரர்கள் வெளியேற முடியாது என தெரிவித்த நிலையில் பொலிஸாருக்கு போராட்டகாரர்களுக்கும் முரண்பாடு இடம் பெற்றது இந்த நிலையில் மன்னார் மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் சம்பவ இடத்திற்கு வருகை தந்த நிலையில் போராட்ட காரர்களை அமைதியான முறையில் மாவட்ட செயலகத்துக்குள் அனுமதித்திருந்தார்.

இந்த நிலையில் நீண்ட இழுபறிக்கு பின்னர்  போராட்டகாரர்கள் அபிவிருத்தி குழு உறுப்பினர்களையும் அபிவிருத்தி குழு தலைவரியும் சந்தித்து பல்வேறு கோரிக்கைகள் அடங்கிய மகஜரை கையளித்தனர்.

இன்றையதினம் குறித்த போராட்டத்துக்கு ஆதரவு வழங்கும் விதமாக அருட்தந்தை சக்த்திவேல் தலைமையில் அருட்தந்தை அருட்சகோதரிகள் கலந்து கொண்டு போராடத்துக்கு ஆதரவு வழங்கியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments