Monday, October 20, 2025
No menu items!
HomeMannar NewsMannar DS Newsமன்னாரிற்கு பிரதமர் ஹரிணி அமரசூரிய விஜயம்!

மன்னாரிற்கு பிரதமர் ஹரிணி அமரசூரிய விஜயம்!

பிரதமர் ஹரிணி அமரசூரிய இன்றைய தினம் திங்கட்கிழமை(4) காலை 11 மணியளவில் மன்னாருக்கான விஜயம் ஒன்றை மேற்கொண்டு வருகை தந்தார்.

பாராளுமன்ற தேர்தலில் வன்னி மாவட்டத்தில் போட்டியிடும் தேசிய மக்கள் சக்தியின் வேட்பாளர்களை ஆதரித்து மன்னார் நகர மண்டபத்தில் இடம்பெற்ற கூட்டத்தில் கலந்து கொண்டார்.

Advertisement

 இதன் போது தேசிய மக்கள் சக்தி (ஜே.வி.பி)கட்சியின் யாழ் மாவட்ட அமைப்பாளர் இராமலிங்கம் சந்திரசேகரன்  கலந்து கொண்டார்.
-மேலும் வன்னி மாவட்ட வேட்பாளர்கள் உள்ளடங்களாக சுமார் 500க்கும் மேற்பட்ட பொதுமக்கள் கலந்து கொண்டிருந்தனர்.

பிரதமரின் வருகையை ஒட்டி மன்னார் நகர பகுதியில் பலத்த பாதுகாப்புக்கள் பலப்படுத்தப்பட்டது.மேலும் மன்னார் நகரசபை மண்டபத்தில் இடம்பெற்ற குறித்த நிகழ்வில் கலந்து கொள்ளச் சென்ற மக்கள் கடுமையான உடல் சோதனைக்கு உற்படுத்தப்பட்டனர்.

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments