Friday, October 17, 2025
No menu items!
HomeMannar NewsMannar DS Newsதலைமன்னார் கடற்பரப்பில் வைத்து கைது செய்யப்பட்ட 08 இந்திய மீனவர்களையும் விளக்கமறியலில் வைக்க நீதவான் உத்தரவு!

தலைமன்னார் கடற்பரப்பில் வைத்து கைது செய்யப்பட்ட 08 இந்திய மீனவர்களையும் விளக்கமறியலில் வைக்க நீதவான் உத்தரவு!

இலங்கை கடற்பரப்பினுல் சட்ட விரோதமாக நுழைந்து மீன் பிடித்த நிலையில் தலைமன்னார் கைது செய்யப்பட்ட ராமநாதபுரம் மாவட்டம் ராமேஸ்வரத்தை சேர்ந்த 8 மீனவர்களையும் எதிர்வரும் 5 ஆம் திகதி வரை (05/09/2024) விளக்கமறியலில் வைக்க மன்னார் நீதிமன்றம் இன்று செவ்வாய்க்கிழமை(27) உத்தரவிட்டது.

இலங்கை கடற்பரப்பினுல் நேற்று திங்கட்கிழமை(26) இரவு சட்ட விரோதமாக ஒரு விசைப் படகுடன் நுழைந்து மீன் பிடியில் ஈடுபட்ட நிலையில் குறித்த 8 மீனவர்களையும் கடல் ரோந்து பணியில் ஈடுபட்ட கடற்படையினர் கைது செய்து தலைமன்னார் கடற்படையிடம் ஒப்படைத்தனர்.

தலைமன்னார் கடற்படையினர் குறித்த மீனவர்களிடம் முன்னெடுத்த விசாரணைகளை தொடர்ந்து இன்று செவ்வாய்க்கிழமை(27) மதியம் மேலதிக நடவடிக்கைகளுக்காக மன்னார் மாவட்ட கடற்றொழில் நீரியல் வளத்துறை  அதிகாரிகளிடம் ஒப்படைத்தனர்.

கடற்தொழில் திணைக்கள அதிகாரிகள் மேலதிக விசாரணைகளின் பின்னர் இன்று (27) மாலை மன்னார் நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தினர்.

இதன் போது விசாரணைகளை முன்னெடுத்த மன்னார் நீதவான் குறித்த மீனவர்களை எதிர்வரும் 5 ஆம் திகதி வரை (05/09/2024)  திகதி வரை விளக்கமறியலில் வைக்க உத்தரவிட்டார்.

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments