மன்னார் முனையம் என்ற பெயரில் அபிவிருத்தி செய்ய அழைப்பு விடுக்கப்பட்டுள்ளதாக அறிகின்றோம்.மன்னார் பகுதி என கூறப்பட்டாலும் எந்த பகுதி என தெரியவில்லை. குறித்த வேலைத்திட்டத்திற்கு அப்பால் பல்வேறு வேலைத்திட்டங்கள் இடம்பெற்று வருகின்றது.
காற்றாலை மின் உற்பத்தி மற்றும் கனிய மணல் அகழ்வு உள்ளிட்ட வேளைத்திட்டங்கள் இவ்வாறு இடம் பெற்று வருகின்றன என வடமாகாண கடற்றொழிலாளர் இணையத்தின் செயலாளர் என்.எம்.ஆலம் தெரிவித்தார்.
-மன்னாரில் இன்று ஞாயிற்றுக்கிழமை (30) மாலை இடம்பெற்ற ஊடக சந்திப்பின் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.