Thursday, October 16, 2025
No menu items!
HomeMannar NewsMannar DS Newsபுகையிலை நிறுவனங்களுக்கு எதிராக மன்னாரில் இளைஞர்கள் முன்னெடுத்த செயற்பாடு!

புகையிலை நிறுவனங்களுக்கு எதிராக மன்னாரில் இளைஞர்கள் முன்னெடுத்த செயற்பாடு!

புகையிலை நிறுவனத்தின் தந்திரோபாயங்களிலிருந்து சிறுவர்களையும், இளைஞர்களையும் பாதுகாப்போம்.” எனும் தொணிப்பொருளில் YAN SRILANKA மற்றும் ADIC அமைப்பின் ஏற்பாட்டில் YAN SRILANKA மன்னார் மாவட்ட இணைப்பாளர் ஜெருஷன் தலைமையில் விழிப்புணர்வு நிகழ்வு இடம் பெற்றது.

சர்வதேச புகைத்தல் தினத்தை முன்னிட்டு தேசிய ரீதியில் பல்வேறு விழிப்புணர்வு நிகழ்வு இடம் பெற்று வருகின்றது அதன் ஒருபகுதியாக மன்னார் மாவட்ட இளைஞர்கள் இணைந்து மாவட்டத்தில் காணப்படும் கடைத் தொகுதிகள், பொது பேருந்துகள், தரிப்பிடம் மற்றும் முச்சக்கர வண்டி தரிப்பிடத்தில் மக்கள் மத்தியில் புரிதல் நிலையை ஏற்படுத்தும் வகையில் விழிப்புணர்வு செயற்பாடுகளில் ஈடுபட்டனர்.

குறிப்பாக போதை பொருள் பாவனைக்கு எதிராக தயாரிக்கப்பட்ட விழிப்புணர்வு Stickers போன்றவற்றினை, பொலிஸ் அதிகாரி மற்றும் சமூக செயற்பாட்டாளர்கள், இளைஞர்கள் இணைந்து காட்சிபடுத்தினர்.

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments