Thursday, October 16, 2025
No menu items!
HomeMannar NewsMannar DS Newsமன்னாரில் இடம் பெற்ற விபத்தில் 22 வயது இளைஞன் பலி!

மன்னாரில் இடம் பெற்ற விபத்தில் 22 வயது இளைஞன் பலி!

மன்னார் தாழ்வுபாடு பிரதான வீதி ரெலிக்கோம் சந்திக்கு அருகாமையில் நேற்று மாலை இடம் பெற்ற விபத்தில் குடும்ப வறுமை காரணமாக தொழில் நிமித்தம் மன்னாரில் உணவகத்தில் பணியாற்றிவந்த 22 வயதான இளைஞன் பரிதமாக மரணமடைந்துள்ளார்.

உயிரிழந்தவர் ஹட்டன் பகுதியை சேர்ந்த (சந்துரு)சந்திரகுமார் ஆவர் இவர் கடந்த 6 வருடங்களுக்கு மேலாக மன்னார் மாவட்டத்தில் தொழில் நிமித்தம் உணவகங்களில் தொழிலாளராக பணி புரிந்து வந்த நிலையில் நேற்றைய தினம் மாலை குறித்த விபத்து இடம் பெற்றுள்ளது.

விபத்து இடம்பெற்று சிகிச்சைக்காக மன்னார் வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்ட நிலையிலேயே இளைஞன் பலியாகியுள்ளார் விபத்து தொடர்பில் மேலதிக விசாரணைகளை மன்னார் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments