Thursday, October 16, 2025
No menu items!
HomeMannar NewsMannar DS Newsபாக்கு நீரிணையை நீந்தி தலைமன்னார் வந்தடைந்து சாதனை புரிந்த 13 வயது மாணவன்!

பாக்கு நீரிணையை நீந்தி தலைமன்னார் வந்தடைந்து சாதனை புரிந்த 13 வயது மாணவன்!

போதைப்பொருள் பாவனையை தவிர்த்தல் மற்றும் கடல் வளங்களை பாதுகாக்க கோரி திருகோணமலையைச்சேர்ந்த 13 வயதுடைய பாடசாலை மாணவன் பாக்குநீரினையை நீந்திக் கடந்து சாதனை படைத்துள்ளார்.

இவர் தமிழ் நாடு தனுஸ்கோடியிலிருந்து இன்று(1) வெள்ளிக்கிழமை அதிகாலை நீந்த ஆரம்பித்து தலைமன்னார் வரை நீந்திக் கடந்துள்ளார்.

குறித்த சிறுவனை யாழ். இந்தியத் துணைத் தூதரகத்தின் புதிய துணைத் தூதுவர் தலைமன்னாரிற்கு சென்று வாழ்த்து தெரிவித்துள்ளார்.

இவர் சுமார் 31.05 கிலோமீற்றர் தூரத்தை 8 மணித்தியாலம் 15 நிமிடங்களில் நீந்திக்கடந்துள்ளார்.

குறித்த மாணவன் திருகோணமலை மாவட்டத்தில் தி.இ.கி.ச.ஶ்ரீ. கோணேஸ்வரா இந்துக்கல்லூரியில் கல்வி கற்று வருகின்றார்.

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments