Saturday, May 18, 2024
No menu items!
HomeMannar Newsமன்னாரை சேர்ந்த மேலும் 7 பேர் தனுஷ்கோடிக்கு அகதியாக தஞ்சம்!

மன்னாரை சேர்ந்த மேலும் 7 பேர் தனுஷ்கோடிக்கு அகதியாக தஞ்சம்!

மன்னாரைச் சேர்ந்த இரண்டு குடும்பம் ஏழு பேர் படகு மூலம் நேற்று வெள்ளிக்கிழமை (1) தனுஷ்கோடி அடுத்துள்ள மூன்றாம் மணல் திட்டில் சென்று இறங்கியுள்ளனர்.

தகவல் அறிந்த ராமேஸ்வரம் மரைன் போலீசார் அவரை மீட்டு முதற்கட்ட விசாரணைக்கு பின்னர் மண்டபம் அகதிகள் முகாமில் ஒப்படைத்தனர்.

-இலங்கையில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடி காரணமாக தாங்கள் இரண்டு குடும்பங்களும் படகு மூலம் தனுஷ்கோடிக்கு வருகை தந்ததாக தெரிவித்துள்ளனர்.

பொருளாதார நெருக்கடி காரணமாக இன்று வரை 295 இலங்கை தமிழர்கள் அகதிகளாக தனுஷ்கோடி வந்து மண்டபம் அகதிகள் முகாமில் தங்க வைக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments