Saturday, May 4, 2024
No menu items!
HomeMannar NewsMadu DS Newsபோதையில் வாகனம் செலுத்திய இ.போ.ச சாரதிக்கு விளக்கமறியல்!

போதையில் வாகனம் செலுத்திய இ.போ.ச சாரதிக்கு விளக்கமறியல்!

மன்னார் இலங்கை போக்குவரத்து சபைக்கு சொந்தமான போரூந்தை குடிபோதையில் ஓட்டி சென்ற சாரதியை விளக்கமறியலில் வைக்குமாறு மன்னார் நீதவான் நீதிமன்ற நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.

மன்னார் பேரூந்து நிலையத்தில் இருந்து தலைமன்னார் நோக்கி பயணிகளுடன்  சென்ற பேரூந்தின் சாரதி குடிபோதையில் வாகனத்தை செலுத்திய நிலையில் மன்னார் போக்குவரத்து பொலிஸாரல் நேற்றைய தினம் புதன் கிழமை மாலை மன்னார் வைத்தியசாலை வீதியில் வைத்து கைது செய்யப்பட்டார்.

இந்த நிலையில் குறித்த சாரதி குடிபோதையில் வாகனத்தை செலுத்தியமை உறுதி செய்யப்பட்ட நிலையில் சாரதியை இன்றைய தினம் வியாழக்கிழமை மன்னார் நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்திய நிலையில் குறித்த சாரதியை எதிர்வரும் 23 திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments