இலங்கையிடமிருந்து வலுவான வரவு செலவுத் திட்டத்தை எதிர்பார்ப்பதாக சர்வதேச நாணய நிதியம் தெரிவித்துள்ளது.
ஏனென்றால் அதன் மூலமாக அரசாங்கத்தின் வருமானம் மற்றும் செலவினங்களுக்கு இடையிலான இடைவெளியைக் குறைக்க முடியும் என இலங்கைக்கான சர்வதேச நாணய நிதியத்தின் பணிப்பாளர் இன்று (20) தெரிவித்துள்ளார்.
கடந்த ஆண்டு (2022) வரலாறு காணாத அளவுக்கு மிக மோசமான நிதி நெருக்கடியினை இலங்கை சந்தித்திருந்ததும் அந்நியச் செலாவணியின் கையிருப்பும் வெகுவாக குறைந்திருந்தது.
இந்த நிலையில் இந்த ஆண்டு (2023) மார்ச் மாதம் சர்வதேச நாணய நிதியத்தினால் வழங்கப்பட்ட முதற்கட்ட கடன்தொகையின் மூலம் நாட்டை மீள கட்டியெழுப்பி ஓரளவு ஸ்திரப்படுத்தி, பணவீக்கத்தை குறைத்து, இருப்புக்களை மீள கட்டியெழுப்ப முடிந்தது என்றும் அவர் இதன் போது தெரிவித்தார்.