ஈழ மக்கள் ஜனநாயக கட்சியின் (ஈபிடிபி) மன்னார் மாவட்ட அலுவலகம் இன்றைய தினம் சனிக்கிழமை காலை வைபவ ரீதியாக திறந்து வைக்கப்பட்டுள்ளது.
மன்னார் தாழ்வுபாடு பிரதான வீதி அமைக்கப்பட்ட குறித்த அலுவலகத்தை கடற்றொழில் அமைச்சர் மற்றும் வன்னி நாடாளுமன்ற உறுப்பினர் குலசிங்கம் திலீபன் ஆகியோர் இணைந்து வைபவரீதியாக திறந்து வைத்துள்ளனர்.
நீண்ட காலமாக மன்னார் மாவட்டத்தில் ஈழமக்கள் ஜனநாயக கட்சியின் கிளை அலுவலகம் இயங்காத நிலையில் இன்றைய தினம் அங்குரார்பணம் செய்து வைக்கப்பட்டுள்ளது.
குறித்த நிகழ்வில் கடற்றொழில் அமைச்சர் டக்லஸ் தேவாந்தா,நாடாளுமன்ற உறுப்பினர் திலீபன்,வைத்தியர் கதிர்காமநாதன்,ஈபிடீபி கட்சியின் மாவட்ட இணைப்பாளர்கள்,இளைஞர் அணி தலைவர்,செயலாளர் பிரதேச இணைப்பாளர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.