Saturday, May 18, 2024
No menu items!
HomeSri Lanka Newsஇலங்கையில் அதிகரித்து வரும் வெப்பநிலை: ஒருவர் பலி!

இலங்கையில் அதிகரித்து வரும் வெப்பநிலை: ஒருவர் பலி!

அக்குரஸ்ஸ திகல பகுதியில் அதிக வெப்பம் காரணமாக நபர் ஒருவர் உயிரிழந்துள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

உயிரிழந்த நபர் குறித்த பகுதியில் வழங்கப்பட்ட தான நிகழ்வொன்றில் கலந்து கொள்வதற்காக மோட்டார் சைக்கிளில் வருகைத்தந்துள்ளார்.

எனினும், சைக்கிள் டயரின் காற்று வெளியேறியதனால் அவர் அக்குரஸ்ஸ நகரை நோக்கி மோட்டார் சைக்கிளை தள்ளி கொண்டு சென்றுள்ளார்.

இதன் போது உஷ்ணம் மற்றும் சோர்வு காரணமாக சுருண்டு விழுந்து அவர் உயிரிழந்ததாக அவரது மனைவி தெரிவித்துள்ளார்.

உயிரிழந்த நபர் 72 வயதான வர்த்தகரெனவும் மற்றும் நான்கு பிள்ளைகளின் தந்தையெனவும் காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

பல வருடங்களாக இதய நோயாளியாக சிகிச்சை பெற்று வந்த வர்த்தகரே இந்த நிலைக்குள்ளாகியுள்ளார்.

அவர் கீழே விழுந்து சில நிமிடங்களுக்குள் 1990 ஆம்புலன்ஸ் வந்த போதிலும் அவர் ஏற்கனவே இறந்துவிட்டதால் பிரேத பரிசோதனை செய்வதற்காக சடலம் மாத்தறை பொது மருத்துவமனைக்கு அனுப்பப்பட்டுள்ளது.

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments